அக்குபஞ்சர்
மற்றும் பிற மாற்று மருத்துவ முறைகளை கற்று சிகிச்சை செய்து வரும் மருத்துவ
நண்பர்களுக்கு வணக்கங்கள் ,
நோய்கள் பெருகிவிட்ட இந்த
காலத்தில் மக்கள் ஆங்கில மருத்துவ முறையை கைவிட்டு மாற்று மருத்துவ முறைகளை நோக்கி
வர துவங்கி உள்ளார்கள். ஆனால் நம்மில்
எத்தனை மருத்துவர்கள் அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி உள்ளோம் என்பது
கேள்விக்குறியே ? ஏனென்றால் பல அக்குபஞ்சர்
மருத்துவர்கள் ஆரம்பத்தில் கற்றதை தவிர , மேற்கொண்டு
தங்களின் நுணுக்கங்களை மேம்படுத்தி கொள்ளாமல் செயல்படுவதால் நாம் எதிர்பார்த்த
அளவு பலன்கள் கிடைப்பதில்லை.
சில நோயாளிகளுக்கு பல்வேறு
அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்து சிகிச்சை செய்தும் குணமாவது இல்லை . இன்னும்
சிலருக்கு குணமாவது போல் இருந்தாலும் ஒரு சில நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நோய்
திரும்ப வந்து விடுகிறது . இது எதனால்? இதுவே இன்று
அக்குபஞ்சர் மருத்துவர்களின் பெரும் சந்தேகமாக உள்ளது . இதற்கு காரணம் நாம் நோயின்
அடிப்படையான காரணத்தை கண்டறிய தவறிவிட்டோம் என்பதே உண்மை. அக்குபஞ்சரில் நாம்
பயன்படுத்தும் புள்ளிகளுக்குசரியான காரணமும் விளக்கமும் தெரியவேண்டும். அப்படி
இல்லாமல் பல்வேறு புத்தகங்களில் யாரோ கொடுத்து இருக்கும் புள்ளிகளை
பயன்படுத்துவதால் முழுமையான குணம் கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை
உடையவன். அவனுடைய நோயிற்கான காரணமும் வேறுபடும். இந்த நிலையில் இந்த வியாதிக்கு
இந்த புள்ளி என்று குறிப்பிட்ட புள்ளிகளை பயன்படுத்துவது நாம் செய்யும் முதல்
தவறு. ஒவ்வொருவருக்கும் நாடி பரிசோதனை செய்து நாம் சுயமாக புள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அக்குபஞ்சரில் நோயிற்கான காரணத்தை எவ்வாறு துல்லியமாக கண்டறிவது மற்றும் எந்த
புள்ளிகளை பயன்படுத்துவது என்பது மிக முக்கியமாகும்.இந்த பயிற்சியில்
அக்குபஞ்சரின் வித்தியாசமான அணுகுமுறை மற்றும் நுணுக்கமான வகையில் புள்ளிகளை
தேர்வு செய்வது எப்படி என்பதை தெளிவாக கற்று கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு பின்னர்
நோயாளிகளை நாடி பரிசோதனை செய்யும்போது நோயிற்கான காரணம் தெளிவாக தெரிய வரும்.
நான் கடந்த 16 வருடங்களாக அக்குபஞ்சர் மருத்துவம் செய்து வருகிறேன். முதலில் ஆரம்ப
காலங்களில் அகுபஞ்சரை மட்டும் கற்று சிகிச்சை தரும் பொழுது கிடைத்த வெற்றியை விட, பிற்காலங்களில் ரெய்கி , அக்குபிரசர், வர்மம் போன்றவைகளை கற்று அவைகளை அகுபஞ்சருடன் இணைத்து சிகிச்சை செய்த பின்
கிடைத்த வெற்றிகளே அதிகம் . ஏனென்றால் இந்த சிகிச்சை முறைகள் ஒன்றுக்கு
ஒன்று தொடர்புடையவை . ஒரு அக்குபஞ்சர் மருத்துவருக்கு ரெய்கி , மற்றும் வர்மம் தெரிந்துருப்பது மிக சிறந்த முறையில் குனபடுத்த
உதவும் .
இந்த சிறப்பு பயிற்சியானது ஒவ்வொரு
மாதமும் 5 நாட்கள் நடைபெறுகிறது. பயிற்சி
நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் குறித்து தெரிந்து கொள்ள கீழ்கண்ட செல்பேசி எண்ணில்
தொடர்பு கொள்ளவும்.
S.செந்தில்குமார்
ACUPUNCTURE RESEARCH ACADEMY
THIRUVARUR.
CELL : 9842380877
பயிற்சி
வகுப்பில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் பயிற்சியின் இறுதி நாளில் பயிற்சி
தொகையை நீங்கள் முழுவதுமாக திரும்ப பெற்றுகொள்ளலாம்.
நாடி பரிசோதனையை சரியாக / முறையாக
செய்யாமல் சிகிச்சை அளிப்பது , கண் தெரியாதவன் ஓவியம் வரைவதற்கு சமம்.