அக்குபஞ்சர் --- சில நம்பிக்கைகளும் , உண்மைகளும் .
நம்பிக்கை - 1.
அகுபஞ்சரில் எல்லா விதமான நோய்களையும் குணபடுத்த முடியும்.
உண்மை -1
அகுபஞ்சரில் எல்லா நோய்களையும் குணபடுத்த முடியாது. 100
நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் அதில் 40 முதல் 50 நபர்களை மட்டுமே குணபடுத்த முடியும்.
மற்றவர்களுக்கு நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் இருக்கும் (Endogrine glands) . சிலருக்கு ரெய்கி சக்கர மையங்களில்(Chakkaras) பிரச்னை
இருக்கும். இன்னும் சிலருக்கு வர்ம
புள்ளிகளில் பாதிப்பு இருக்கும்.
அதை போன்ற நபர்களுக்கு Acupressure,
Reiki, Varma Theraphy, Mudras, Breathing Technique, போன்ற சிகிச்சை முறைகளையும் இணைத்து
பயன்படுத்தினால் மட்டுமே குணம் கிடைக்கும் .
நம்பிக்கை - 2.
அகுபஞ்சரில் பக்க விளைவுகள் கிடையாது .
உண்மை -2
பக்க விளைவு என்று கூறுவதை விட சக்தி சம நிலை அற்ற தன்மை என்று
கூறலாம் . அதிலும் குறிப்பாக பஞ்சபூத புள்ளிகளை (60 command points) பயன்படுதும்
போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பஞ்சபூத புள்ளிகளை தவறாகவோ அல்லது தேவை
இல்லாமலோ பயன் படுத்தினால் அது பல்வேறு
உறுப்புகளில் ரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்டத்தை சமநிலை இல்லாமல் செய்து
விடும் . இதனால் ஏற்படும் பாதிப்புகள்
உடனடியாக தெரியாது . சில காலம் கழித்து வேறு உறுப்புகளில் வேறு விதமான
பிரச்சினைகள் தோன்றும்.
நம்பிக்கை - 3
அகுபஞ்சரில் stimulator போன்ற ஏலேக்ட்ரோனிக் கருவிகளை பயன்படுத்தலாம் .
உண்மை -3
Meridian
or channel களில் செல்லும் மின்காந்த சக்தியின்
அளவானது மில்லி வோல்ட் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் stimulator போன்ற
கருவிகளில் மூன்று முதல் பன்னிரண்டு வோல்ட் வரை பயன்படுத்த படுகிறது. இது
இயற்கையான அளவை விட பல நூறு மடங்கு அதிகம். எனவே நாடிகளில் இயக்கம் தாறுமாறாக
பாதிக்கப்படும்.
நம்பிக்கை - 4
DU-20 என்ற புள்ளியானது எல்லா நோயாளிகளுக்கும்
முதலில் பயன்படுத்த வேண்டிய புள்ளி ஆகும்.
உண்மை - 4
DU-20 என்ற புள்ளியானது யோக முறையில் பிரம்மரந்திரம்
என்று அழைக்கபடுகிறது. இந்த இடத்தின் உட்
பகுதியில் PINEAL சுரப்பி அமைந்துள்ளது . மேலும் கொண்டை கொல்லி
எனப்படும் மிக மிக முக்கியமான வர்மம் இங்கே அமைந்து உள்ளது . இது TRIPPLE WARMER ன் DIVERGENT
POINT ஆகவும் செயல் படுகிறது இந்த புள்ளி எல்லாருக்கும் பயன்படுத்த
வேண்டியது இல்லை. நான் கடந்த 12
வருடமாக பல ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறேன் . நான் யாருக்கும் DU-20
என்ற புள்ளியை பயன்படுத்தியது இல்லை.இந்த புள்ளி இல்லாமலேயே சிறப்பாக குணமாக்கலாம்
.
நம்பிக்கை - 5
இந்த நோயிற்கு இந்த குறிப்பிட்ட புள்ளிகள் என்ற வகையில் அக்குபஞ்சர்
புள்ளிகள் பயன்படுத்தபடுகிறது. ( batch
points (or) group point (or) Therapeutic points).
உண்மை - 5
அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலை படுத்துவது
ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது
அவ்வாறு பயன்படுத்தும் போது நோய் முழுமையாக குணமாகாமல் வேறு
உறுப்பிற்கு நோயின் தாக்கமானது திசை திருப்ப படுகிறது . இது பின்னால் வேறு ஒரு பிரச்சினையாக
வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு
பயன்படுத்துவது சரி என்றால், நாடி பரிசோதனை என்ற ஒன்றே தேவை இல்லை என்று ஆகி
விடுகிறது .ஆனால் அகுபஞ்சரின் சிறப்பம்சமே நாடி பரிசோதனைதான். எனவே நாடி பரிசோதனை செய்து அதற்கேற்ப புள்ளிகளை
தேர்வு செய்வதே மிக சிறப்பான பலனை தரும்.
நம்பிக்கை - 6
நாடி பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் .
உண்மை - 6
நாடி பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. நோயாளி எதுவும்
சாப்பிடாமல் இருக்கும்போது நாடி பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது . பகலில் , மாலை
வேளைகளில் செய்வது துல்லியமான கணிப்பை தராது. ஒரு சோதனை முயற்சியாக , நீங்கள்
ஒரு நபருக்கு நாடி பரிசோதனையை காலையில் சாப்பிடாமல் , சாப்பிட
பிறகு , மதியம் ,
மாலை, இரவு என ஐந்து முறை செய்து பாருங்கள்.
உங்களுக்கே உண்மை விளங்கும்.
எந்த ஒரு நோயிற்கும் அடிப்படையான காரணம், பஞ்ச
பூத புள்ளிகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சக்தி குறைவே ஆகும் .
No comments:
Post a Comment