சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டுபிடிப்பவரே மிக சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர் . .

Tuesday, July 1, 2014

ஒரு புதிய அணுகுமுறை - 2

எதிர் அழிக்கும் சுற்று.

நாற்பது வயதுடைய ஒருவர் காலை ஆறு மணிக்கு சிகிச்சைக்கு வந்தார். வரும்போதே மூச்சு இறைத்து நடக்கவே மிகவும் சிரமப்பட்டு வந்தார். நாற்காலியில் அமர்ந்த பின்னர் சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு வந்தார். அவருக்கு நாடி பரிசோதனை செய்தபோது நுரையீரலில் சக்தி ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது. பெருங்குடலில் சக்தி ஓட்டம் இல்லாமலும் இருந்தது. அதே சமயம் மரம் மூலபொருளில் மிக அதிக சக்தி ஓட்டம் இருந்தது. சாதாரணமாக காற்று மூலபொருளின் இயக்கம்தான் மரம் மூலபொருளை பாதிக்கும். ஆனால் இங்கே அதற்கு எதிர்மறையாக இருந்தது. இதற்கு பெயர்தான் எதிர் அழிக்கும் சுற்று. இந்த மாதிரியான நபர்களுக்கு காலை வேளையில் ஆஸ்துமா மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை இரண்டு மணியில் இருந்து காலை ஏழு மணி வரை இந்த ஆஸ்துமா இருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும் . இதற்கு காரணம் மரம் மூலபொருளின் இயக்கம் காற்று மூலபொருளின் இயக்கத்தை தடுத்துக்கொண்டு உள்ளதுதான் காரணமாகும். இதற்கு சாதாரணமாக ஆஸ்துமாவிற்கு பயன்படும் புள்ளிகளான LU9, LU1, LU11 போன்ற புள்ளிகள் பயன்படாது. இதற்கு நான் பயன்படுத்திய புள்ளி LIV4 மற்றும் CV9, LU8 ஆகிய மூன்று புள்ளிகள் மட்டுமே. இதை போன்று எல்லா மூலபொருளுக்கும் எதிர் அழிக்கும் சுற்று உள்ளது. இது இயல்பான அழிக்கும் சுற்றுக்கு எதிரிடையாக செயல்படும். சில நபர்களுக்கு இந்த வகை சிகிச்சை மட்டுமே பலன் கொடுக்கும்.

உங்கள் எண்ணத்தின் வலிமையையும், சக்தியும் அக்குபஞ்சர் ஊசி வழியாக பஞ்சபூத சக்தியுடன் கலந்து நோயை  குணமாக்க செய்கிறது . 


அகுபஞ்சரில் முழுமையான தெளிவும், தீர்கமான சிந்தனையும் ,  ஆழமான அறிவும் இருந்தால் மட்டுமே உங்களால் எந்த ஒரு நோயாளியையும் முழுமையாக குணப்படுத்த  முடியும். 

5 comments:

  1. your approach is very nice.. its tru .. your master is Grate


    s.shaji.md(acu)

    ReplyDelete
  2. excellent posts! Where do u practice Dr! Giving advance training?please inform.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு

    ReplyDelete
  4. Dear sir I'm suffering with stroke pakkavatham since two years please guide me for recovery...age 32

    ReplyDelete