அக்குபஞ்சர்
மருத்துவ நண்பர்களே ,
அக்குபஞ்சர் மருத்துவமானது மிக
சிறப்பாக குணப்படுத்த கூடியது என்றாலும் ,
அது மக்களிடையே இன்னும் சரியான அளவில் சென்று
அடையவில்லை என்பதே உண்மை . இதற்கு காரணம் அக்குபஞ்சர் மருத்துவத்தை சரியான
முறையில் கற்று அறியாமலும் அதன் உண்மையான
தத்துவங்களை புரிந்துகொள்ளமலும்
செயல்படுவதுமே ஆகும். அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரே ஒரு ஊசியை கொண்டு,
ஒரு நோயாளியின் உடலில் தோன்றி உள்ள அணைத்து
விதமான அறிகுறிகளையும் நீக்கி விட முடியும் . ஏன் என்றால் நோய் என்பது ஒன்றுதான் .
அது பல்வேறு அறிகுறிகளை காண்பிக்கும். நாம் அறிகுறிகளை நீக்க வேண்டும் என்று
எவ்வளவுதான் போராடினாலும் அது நீங்காது. சில நேரங்களில் குணமாவது போல் தெரியும் .
அடுத்த சில நாட்களில் திரும்ப வந்துவிடும். ஏன் என்றால் உடலில் தோன்றி உள்ள
அடிப்படையான நோய் இன்னும் உள்ளது. அது எவ்வளவு நாள் ஆனாலும் அறிகுறிகளை திரும்ப
திரும்ப தோற்றுவிக்கும் . எனவே நாடி பரிசோதனையின் மூலமாக நோயின் மூல காரணத்தை
கண்டு பிடித்து அதை சரி செய்ய வேண்டும்.
இதற்கு கீழ்
கண்டவற்றில் நாம் தெளிவாக வேண்டும் .
முதலில் நாடி
பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
இரண்டவது அந்த
உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்
.
மூன்றாவது அந்த
பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
நான்காவது அந்த
புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதில் நமக்கு தெளிவு வேண்டும் .
ஐந்தாவது அந்த
புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
ஆறாவது அந்த
புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும் .
ஏழாவது அந்த
புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.
மேற்கண்டவாறு
செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் .
அக்கு பஞ்சரில்
வெற்றிகரமாக குணமாக்க வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது.
இன்னும் சிலர்
அக்குபஞ்சர் என்ற போர்வையில் மறைந்து கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து
வருகின்றனர்.
வேறு சிலர்
அகுபஞ்சரை சரியாக விளங்கி கொள்ளாமல், அதன்
தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் சிகிச்சை செய்வதால், அக்குபஞ்சர் சரியாக செயல்படாது என்ற ஒரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி
விட்டனர். எனவே அக்குபஞ்சர் மருத்துவர்கள் பின்பற்றவேண்டியவைகளை எனக்கு தெரிந்த
வரையில் கொடுத்து இருக்கிறேன். இதை பின்பற்றினால் நாமும் வளரலாம். அக்குபஞ்சர்
மருத்துவமும் வளரும்.
1. நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே
செய்ய வேண்டும் .
2. நாடி பரிசோதனையை வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் மட்டுமே செய்ய வேண்டும்
3. அதிகமான ஊசிகளை பயன்படுத்த
வேண்டாம்.
4. மருந்து மாத்திரைகளை படிப்படியாக நிறுத்த சொல்ல வேண்டும்.
5. ஒரு வாரம் அல்லது பதினைந்து
நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை
தர வேண்டும்.
6. stimulator போன்ற எலக்ட்ரோனிக் சாதனங்களை
பயன்படுத்தவேண்டாம் .
7. பிறரால் பரிந்துரை செய்ய பட்ட சிகிச்சை குறிப்புகளை அதிகம்
பயன்படுத்த வேண்டம் .
8. நாடிகளின் தன்மையை பொருத்து சுயமாக புள்ளிகளை தேர்வு செய்யவும்.
9. சில குறிப்பிட்ட சுவைகளை குறைக்க சொல்லவும் .
இறுதியாக ,
உங்களின் மீதும் , உங்கள் சிகிச்சையின் மீதும் நம்பிக்கை
வையுங்கள் .
இயற்கையின் விதியை நம்புங்கள் .
சிகிச்சை வெற்றி பெற்றால் உடனே
பெருமை கொள்ளவேண்டாம் .
அது நமது முன்னேற்த்தை தடை செய்து
விடும்.
உங்களின் சந்தேகங்களை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் .
உங்களுக்கு பதில் அனுப்பப்படும் .
மேலும் இந்த வலை பக்கத்திலும் அது
பிரசுரிக்கப்படும் .
மற்றவர்களுக்கும் பயன்படும்.
எனது ஈமெயில் முகவரி ,
senthilkumar.acuhealer@Gmail.com
Mobile No : 9842380877
அக்குபஞ்சரில் நாம் எந்த
அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஊசிகளை பயன்படுத்துகிறோமோ, அந்த
அளவிற்கு நோயாளியின் நோயை பற்றி நமக்கு தெரியவில்லை / புரியவில்லை என்று அர்த்தம்
.
No comments:
Post a Comment